காலனின் அழைப்பை
எதிர் நோக்கி ,
என் இறுதி
உறக்கத்தை தேடும்
என் விழிகளுக்குள்
உன் நினைவே !!
உன்னை தேடும்
இந்த உயிருக்கு
இனி அவள்
தடை இல்லை !
மனைவியின் மடியில்
மன்னிப்பாய்
என் கண்ணீர் !!
ஆறடியில் அடங்குவேனோ
அக்கினியில் சிதைவேனோ
நான் அறியேன் ?
உன் திருபாதம்
நாடி என்
இறுதி கடிதம் !!!
நாம் பிரிந்து
நாலு பத்து
வருசங்களாச்சு !
வாலிப காதலை
விட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !
நீ
தனியாளோ ? - இல்லை
துணையோடோ ?
கேட்க வரம்பில்லை,
ஆனால் மனமில்லை
பாராமல் பிரிய
இறுதியாக ?!!!
உன்
கடை(சி ) பார்வை
வேண்டுமடி!
காட்டுக்கு செல்லும்
முன்!!!
வாலிப காதலை
ReplyDeleteவிட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !----
என்ன ஒரு அருமையான வரிகள்..
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவாலிப காதலை
விட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !----
என்ன ஒரு அருமையான வரிகள்..//
வருகைக்கும் வரிகளை ரசித்து பாராட்டியதற்கு நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *!
ஒவ்வோறு மனிதனுக்குள்ளும் இருக்கும் வலி...
ReplyDeleteகவிதைக்கு வாழ்த்துக்கள்..
கவிதை மிக அருமை....
ReplyDelete//பாட்டு ரசிகன் said...
ReplyDeleteஒவ்வோறு மனிதனுக்குள்ளும் இருக்கும் வலி...
கவிதைக்கு வாழ்த்துக்கள்..//
//பாட்டு ரசிகன் said...
கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html//
நன்றி பாட்டு ரசிகன் நண்பரே வலி தான் வாழ்க்கைக்கு வழி போல
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே !
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteகவிதை மிக அருமை....
நாஞ்சில் அண்ணாரோட வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா தொடர்ந்து வரவும் .....