Wednesday, April 6, 2011

குறுந்தகவல் கடிதங்கள் !!!

அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?

எவ்வளவோ கதைகள் ...
சின்ன சின்ன
சிணுங்கல்கள் ...
இடை விடாத
உன் அழைப்புகள்....
இன்றும் சாரல்
போல் நினைவுகளில் ...

எப்படி எடுத்தாய்
உரிமையை
என்னையும் அறியாமல் ...

இரவெல்லாம் நீமட்டும்
தான் பேசுவாய் ...
இறுதியில் காதலை
சொன்னால் மட்டும் ...
மௌனம் ஆக்குகிறாயே
ஒவ்வொரு இரவையும்....

ஒளிவு இல்லை
மறைவும் இல்லை
ஒன்றை தவிர ..!
நட்பை தாண்டி
நாளாச்சுடி..!

காதலை ஏற்க்க
மனம் இல்லையா ?
இல்லை .........
உன் மனதில்
நான் இல்லையா ?

என் கடைசி
கேள்வியும் ...
உன் கடைசி
மௌனமும் ....
காதலால் தான் ?

அன்று வரை
ஒவ்வொரு
இரவின் இறுதி
தான் மௌனமாகும் !!!

இன்றோ
இரவெல்லாம் மௌனமான
ரணமடி !!!!

என் அன்பு தோழியே
எங்கு இருகிறாய்
நீ?

No comments:

Post a Comment