Tuesday, April 19, 2011

கடை(சி ) பார்வை வேண்டுமடி!....

அன்பு தங்கமே !,

காலனின் அழைப்பை
எதிர் நோக்கி ,
என் இறுதி
உறக்கத்தை தேடும்
என் விழிகளுக்குள்
உன் நினைவே !!

உன்னை தேடும்
இந்த உயிருக்கு
இனி அவள்
தடை இல்லை !
மனைவியின் மடியில்
மன்னிப்பாய்
என் கண்ணீர் !!

ஆறடியில் அடங்குவேனோ
அக்கினியில் சிதைவேனோ
நான் அறியேன் ?
உன் திருபாதம்
நாடி என்
இறுதி கடிதம் !!!

நாம் பிரிந்து
நாலு பத்து
வருசங்களாச்சு !

வாலிப காதலை
விட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !

நீ
தனியாளோ ? - இல்லை
துணையோடோ ?
கேட்க வரம்பில்லை,
ஆனால் மனமில்லை
பாராமல் பிரிய
இறுதியாக ?!!!

உன்
கடை(சி ) பார்வை
வேண்டுமடி!
காட்டுக்கு செல்லும்
முன்!!!

6 comments:

  1. வாலிப காதலை
    விட - இந்த
    வயோதிக காதல்
    வலிக்குதடி !----
    என்ன ஒரு அருமையான வரிகள்..

    ReplyDelete
  2. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    வாலிப காதலை
    விட - இந்த
    வயோதிக காதல்
    வலிக்குதடி !----
    என்ன ஒரு அருமையான வரிகள்..//

    வருகைக்கும் வரிகளை ரசித்து பாராட்டியதற்கு நன்றி
    !* வேடந்தாங்கல் - கருன் *!

    ReplyDelete
  3. ஒவ்வோறு மனிதனுக்குள்ளும் இருக்கும் வலி...

    கவிதைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. //பாட்டு ரசிகன் said...
    ஒவ்வோறு மனிதனுக்குள்ளும் இருக்கும் வலி...

    கவிதைக்கு வாழ்த்துக்கள்..//

    //பாட்டு ரசிகன் said...
    கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
    கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

    http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html//

    நன்றி பாட்டு ரசிகன் நண்பரே வலி தான் வாழ்க்கைக்கு வழி போல

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே !

    ReplyDelete
  5. MANO நாஞ்சில் மனோ said...
    கவிதை மிக அருமை....

    நாஞ்சில் அண்ணாரோட வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா தொடர்ந்து வரவும் .....

    ReplyDelete