Friday, March 18, 2011

சும்மா ஒரு கவிதை!!!.........சும்மா ஒரு காதல்!!!........

அவள் : முதல் சந்திப்பு .....?

அவன் : அன்று தெரியாது
உன்னை காதலிப்பேன்
என்று...

இன்றும் தெரியாது
என்று சந்தித்தோம்
என்று ....

ஜென்மம் தொட்ட
உறவு நீ !!!

அவள் : என் முகம்....?

அவன் : ஆறடியோ......
ஈரடியோ.........
என் அருகில்
என்றும் பௌர்ணமி !!!

அவள் : பொய் ....?

அவன் : எனக்கு மட்டுமே
சொந்தமான உன்
கோபம் ....!

அவள் : முத்தம் ....?

அவன் : அ ... முதல்
ஔ... வரை

நமக்குள் மட்டும் ....

அவள் : பிரிவு ...?

அவன் : வார்த்தையிலேயே வலி
உள்ளது ...
வார்த்தையாக மட்டும்
இருக்கட்டுமே ....
நம் வாழ்வில்
வேண்டாமடி!!! .....

அவள் : காமம் ....?

அவன் : என் அன்பின்
அடுத்த பரிமாணம் !!!

அவள் : காதல் .....?

அவன் : இன்று வரை
உன் உதடுகள்
பேசாத வார்த்தை ...

என்றும்
உன் இமைகளிலும்
இரு விழிகளிலும்
காண்பது ...!!!

Wednesday, March 9, 2011

பொய்யானது இரவுகள் .....

ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .......

கவிதை சொல்லவா ? -இல்லை
கதை சொல்லவா ?
கதை வேண்டாம்
சில பொய் சொல்லவா?

பொய் !!!!!
உன்னை ஏமாற்ற
நீ சொன்ன காதல் !!!

பொய் !!!!
அழகான ஒரு
உயர்கொல்லி !!!

பொய் வேண்டாம்
ஒரு மெய் சொல்லவா?

இரவின் மடியில்
நீ!
உன் மடியில்
நான் !!
என் மூச்சு காற்றில்
இளைபாரியது உன்
இடை !!!
கேள்வி கேட்க்க வந்த
உன் உதடுகள்
தடுமாறின --- விடிந்ததும்
கேட்கிறேன் என்றது .............................................................
என்னை மன்னிப்பாயாடி ????

விடியும் ஒரு நாள்
அன்று சொல்கிறேன் உண்மையை (மீதியை)

Friday, March 4, 2011

முதல் ராத்திரி!!!

கனவொன்று கண்டேனடி !
உனக்கும் எனக்கும்
முதராத்திரி!!

கவிதை வரும்
மாலை பொழுதில் ....

அந்தி பகலவன்
ஓடி மறைந்தான் !
காதல் நிலா
வெட்கப்படுவாள் என்றோ ?!!

இல்லை என்னுடன்
காதல் பேச நீ
வருவாய் என்றோ ?!!!

நாளை வருவான்
கேட்டு வைக்கிறேன் !

ஒற்றை நிலா
உச்சிவரை சென்றுவிட்டாள்!
வானை நோக்கிய
என் விழிகள் !!!

யாரோ அழைக்கிறார்கள்
இடை மறித்து சொன்னது
என் மனது !

திரும்பிய விநாடி
திகைத்து போனேன்
வந்தது நீ தான் !!!

என் விழியோடு
புது மொழி பேசியது
உன் விழிகள் !!!

காதலை கூட
சொன்னாய் - சில
கவிதை கூட
பேசினாய் - ஒரு
பொய் கோபம் கூட
கொண்டாய் ..

எதிரியாய் நேரம்
கரைகிறதே !
ஏனோ - நான்
பேச வார்த்தை தெரியாத
குழந்தையாய் நின்றேன் !!!

எப்படி பேசுவேன்
நேற்று மணமேடையில் நீ !
மணமகன் யாரோ ?!!
கனவை கலைத்தது
கண்ணீர் !!!

கனவொன்று கண்டேனடி !
உனக்கும் எனக்கும்
முதராத்திரி!!!!??