Friday, November 18, 2011

அழகான தோழி !!!

அவள் அழகானவள் தான் !

இரு கரம் பற்றி
நடக்கையில் ,
தூசி பட்டதென்னவோ
என் கண்களில் தான் -
கண்ணீர் கண்டதென்னவோ
அவள் கண்களில் !

அவள் அழகானவள் தான் !

எத்தனையோ தடுக்கல்களில்
என் வாழ்வில்
நட்பாய் துணை நின்ற -

அவள் அழகானவள் தான் !

நான்கு வருட
பிரிவின் பின்
எத்தனையோ
வலி இருந்தும்
பொய்யாய் நலம் -
என்கையில்

அவள் அழகானவள் தான் !

No comments:

Post a Comment