Tuesday, January 11, 2011

அடுத்த முதல்வர் யார் ? ஏன் ?

வணக்கம் நண்பர்களே

இது வரை இதுநாள் வரை கவிதைனு ஏதோ எழுதினேன் இனிமேல் கொஞ்சம் மற்றதையும் எழுதலாம்னு யோசிக்குறேன் . முதல் பதிவு என்ன போடலாம்னு யோசிச்சேன் தமிழ் பதிவு தமிழர்களுக்காகவே இருக்கட்டுமே !!

சரி உங்களையே கேக்குறேன்

அடுத்த முதல்வர் யார் ? ஏன் ?

Friday, January 7, 2011

குழந்தையின் கிறுக்கல்கள் !!!

முட்டாளாக முட்டாமல்
சுகமாகவே வந்தேன்
அன்னையே உன்
மூச்சிரைப்பிலும் முக்களிலும்
தண்ணீர்குடம் தாண்டி
தாய்மடி தாண்டி
வந்தேன் உன்னைக்காண !!!!

எத்தனையோ கஷ்டங்கள்
எவ்வளவு வலிகள் தான்
என்னால் உனக்கு

மன்னிப்பு கேட்க
மொழி தெரியாது
என் மொழியில்
கேட்டேன் - என்
முதல் அழுகை

எனக்கான ஒரே
வானம் ..
எனக்கான ஒரே
உலகம் ..
உன் வயிறு!!
இன்னொரு முறை
உன் அன்பில்
உள் இருக்க ஆசை தான்
போதும் இந்த ஜென்மம்
அடுத்த ஜென்மத்திலும்
அனுமதி கொடு !!!

Thursday, January 6, 2011

போய்வாரேன் தாய் வீடே .....

கல்யாணமும் ஆய்டுச்சு
கணவனோட போகபோறேன் !
பெற்ற கண்கள் வலி அனுப்ப
புது வீடு போகபோறேன் !

நேற்று கண்ட கனவெல்லாம்
நிஜமாகும் நேரம் வர !
புது கனவு காண
புகுந்த வீடு போகபோறேன் !!

இருந்தாலும் ஒரு
ஏக்கம் !?

எப்படி நான்
இருக்கபோறேன் ?!!

மஞ்சபூசி அழகு
பார்த்த ...
என் அம்மாவை தனியா விட்டு?!

" பொழுது சாயும்
நேரமாச்சு ...
புள்ள எங்கடி
இன்னும் காணோம் ?.....

சத்த தூரம்
போய் பாரு
புள்ள கிள்ள
வர்றாளானு...... "

ஆளுமையோடு அன்பை காட்டும்
அப்பாவை விட்டு ...!!?

நேத்து வரை
சண்டைகோழி ...
இன்று ஏனோ
தெரியலடா ....?

" சாஞ்சி அழனும்
தோளைக்கோடு .... "
தோழனான அண்ணனை விட்டு ....?!!

எப்போதும் போகாது
செத்தாலும் உன் நினைவு .....
போய்வரேன் என் வீடே ...............!!!

Wednesday, January 5, 2011

விதியோடு போராடும் மௌனங்கள்!!!

நான்கு கண்களும்
நலம் விசாரிக்கையில்
ஏதோ என்றது
நம் கண்ணீர் !!!

பட்டாம் பூச்சியாய்
கோர்த்து திரிந்த
உன் கைகளில் !
இன்று உன்னைப்போல்
இன்னொரு குழந்தை !!!

எத்தனை மன்னிப்புகள்
எத்தனை வாழ்த்துக்கள்
எத்தனை விசாரிப்புகள்
அத்தனையும் ஒரு நிமிட
விவாதத்துடன் !!!

மனம்விட்டு உதிர்ந்த
சிரிப்புகள் - இறுதியில்
கனத்ததடி மனது
எதிர்பார்ப்புகளற்ற
என் தோழி
மீண்டும்
" என்று சந்திப்போம்? " - என்கையில்
தீராத உன் நினைவுகளுடன்

Tuesday, January 4, 2011

நித்தம் வேண்டுமடி உன் முத்தம் !!!

நித்தம் நித்தம்
முத்தம் கேட்கிறேன் !

நீ தர மாட்டாய்
என்று தெரிந்தும் !

தினமும் உன்
புகைப்படத்திடம்!!