இது வரை இதுநாள் வரை கவிதைனு ஏதோ எழுதினேன் இனிமேல் கொஞ்சம் மற்றதையும் எழுதலாம்னு யோசிக்குறேன் . முதல் பதிவு என்ன போடலாம்னு யோசிச்சேன் தமிழ் பதிவு தமிழர்களுக்காகவே இருக்கட்டுமே !!
முட்டாளாக முட்டாமல் சுகமாகவே வந்தேன் அன்னையே உன் மூச்சிரைப்பிலும் முக்களிலும் தண்ணீர்குடம் தாண்டி தாய்மடி தாண்டி வந்தேன் உன்னைக்காண !!!!
எத்தனையோ கஷ்டங்கள் எவ்வளவு வலிகள் தான் என்னால் உனக்கு
மன்னிப்பு கேட்க மொழி தெரியாது என் மொழியில் கேட்டேன் - என் முதல் அழுகை
எனக்கான ஒரே வானம் .. எனக்கான ஒரே உலகம் .. உன் வயிறு!! இன்னொரு முறை உன் அன்பில் உள் இருக்க ஆசை தான் போதும் இந்த ஜென்மம் அடுத்த ஜென்மத்திலும் அனுமதி கொடு !!!
நான்கு கண்களும் நலம் விசாரிக்கையில் ஏதோ என்றது நம் கண்ணீர் !!!
பட்டாம் பூச்சியாய் கோர்த்து திரிந்த உன் கைகளில் ! இன்று உன்னைப்போல் இன்னொரு குழந்தை !!!
எத்தனை மன்னிப்புகள் எத்தனை வாழ்த்துக்கள் எத்தனை விசாரிப்புகள் அத்தனையும் ஒரு நிமிட விவாதத்துடன் !!!
மனம்விட்டு உதிர்ந்த சிரிப்புகள் - இறுதியில் கனத்ததடி மனது எதிர்பார்ப்புகளற்ற என் தோழி மீண்டும் " என்று சந்திப்போம்? " - என்கையில் தீராத உன் நினைவுகளுடன்