Friday, November 18, 2011

அழகான தோழி !!!

அவள் அழகானவள் தான் !

இரு கரம் பற்றி
நடக்கையில் ,
தூசி பட்டதென்னவோ
என் கண்களில் தான் -
கண்ணீர் கண்டதென்னவோ
அவள் கண்களில் !

அவள் அழகானவள் தான் !

எத்தனையோ தடுக்கல்களில்
என் வாழ்வில்
நட்பாய் துணை நின்ற -

அவள் அழகானவள் தான் !

நான்கு வருட
பிரிவின் பின்
எத்தனையோ
வலி இருந்தும்
பொய்யாய் நலம் -
என்கையில்

அவள் அழகானவள் தான் !

Friday, May 20, 2011

இந்த(அந்த) நொடி போதுமடி!!! ......

எனைப்பார்த்து திரும்பும்
நேரமெல்லாம் ...
உன் கழுத்தோர
மடிப்பில்...
கரைந்தேனே நான் !

காலம் தள்ளி
காதலை சொல்ல..
வெட்கத்தை மட்டும்
விடையாய் கொடுத்து
ஓடினாயே ?
மாண்டாலும் மறக்காதடி
அந்த நொடி !!

இட்டேறி வழி
பயணத்தில் ...
இடறி நீ
என்மேல விழ ...
வெட்கம் இல்லா
முத்தமிட்டு ...
சுற்றும் முற்றும்
பார்த்த விழி
சொல்லிச்சடி
உன் காதல்!!!

இந்த ஜென்மம்
போதுமடி !
இந்த நொடி
நீளுதடி - என்
வாழ்வில் !!!!

Wednesday, May 18, 2011

காதலிப்போமா காலை வரை !!!!

இரவு வானம்
தனிமையில்!
என்னோடு நீ
மட்டும்!
நிழல் கூட
துணைக்கு வேண்டாம்!
காதலிப்போமா
காலை வரை !!

என் மார்மீது ..
நீ உறங்கி..
நான் உறங்கா..
நீண்ட இரவு ...
கேட்போம்!!!

நட்சத்திர சங்குகள்
பொருக்கி !
நீலவான கரையோரம்
மேக வீடு
கட்டலாம் !!!!

நிலா பெண்ணை
சாட்சிக்கு வைப்போம்
நம் காதலுக்கு !
காதலிப்போமா
காலை வரை !!!!

Tuesday, May 17, 2011

காதலி வரும் நேரம் !!!

உன்னை தேடியே
என் பார்வை
தீர்ந்துவிடும் போல
சீக்கிரம் வந்துவிடேன் !!

நீ அருகில்
இருக்கையில் மட்டும்!
இவ்வுலகம் விடிந்து
இருப்பதேன் ?

நீ வந்து சென்ற
இடமெங்கும்
மல்லிகை மணம்!
நீ சூடி
இருந்தது என்னவோ
கனகாம்பரம் ?

இரவெல்லாம் உறங்கியது
போல் நினைவு !
அறையெல்லாம் உன்
பேச்சு சத்தம் !
கனவோ ?

என்னவோ இருக்கட்டும்
என்னவள் வருவாள்
நேரமாச்சு !!
பேருந்தை நோக்கும்
விழிகள் மட்டும்
ஊமையாக ?

Monday, May 16, 2011

என் வானம் !

அம்மாவாசை இரவாய்
என் வானம் ! - அதில்
முழு நிலவாய்
உன் முகம்
மட்டும் தெரிவது
எப்படி ?

காதல் ரொம்ப தூரமோ ? ....

காற்றில் போட்ட
துளையாக..
காணாமல் போனதே
என் காதல் !...

கருகி விழுந்த
பூவாக ...
மக்கி போனதே
என் காதல் !!....

காதலில் நான்
ஒரு நொண்டி !
எப்படி தொடுவேன்
இமயத்தை !!?

அவளுக்கு பிடிக்கும் .....

என் கவிதை
பிடிக்கும் அவளுக்கு .....

அதில் காதல்
பிடிக்கும் அவளுக்கு .....

என்னை கூட
பிடிக்கும் அவளுக்கு .....

என் காதல்
மட்டும் பிடிக்காது !!!!!

Saturday, May 14, 2011

என் தோழியே மன்னிப்பாயா ? !!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

உன் கோபத்தை
ரசிக்க தெரிந்தவன்
மதிக்க மறந்து
விட்டேன் -மன்னிப்பாயா?

உன் பிரிவால்
அறிந்தேனடி ,
அன்பின் விலையை !!!

பாராத உன்
முகம் !
பதில் இல்லாத
பேச்சு !
தனிமையிலும் கேட்குதடி
உன் சிரிப்பு
சத்தம் !!!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

Thursday, May 5, 2011

சும்மா... கவிதைகள் : வெட்கமா ? - வேண்டாமா ?

நான் உன்னை
கடக்கும் பொழுதெல்லாம்
சாத்திக்கொள்கிறதே - உன்
ஜன்னல் கதவுகள் !!?

நான் உன்னை
பார்க்கும் பொழுதெல்லாம்
சிரிக்கிறாயே !!?
என் பார்வை என்ன
நைட்ரஸ் ஆக்சைடா ?!!

ன்னை கடக்கும்
பொழுது மட்டும்
புதிதாய்,
நடை பழகுதே
உன் கால்கள்
அன்னிச்சையாக ?!!

Tuesday, May 3, 2011

சின்ன சின்ன கவிதைகள் சொல்லி ...

காதலை தான்
தர மறுக்கிறாய்!
கனவையாவது கொடு
நான் இருக்கிறேனா
பார்க்கிறேன் ?!!

காதலை தவிர்த்து
எத்தனையோ பொய்
சொல்லி இருப்பேன்
உன்னிடம் பேச !
தவிர்த்த ஒரே ஒரு
உண்மையை சொல்ல
பயம் !!
பேச மாட்டாயோ
என்று !!?

ன் நினைவுகளின்
நிமிடங்களை கேட்டுப்பார் ,
ஒவ்வொரு வினாடிகளுமே
உன் பெயரையே
சொல்லும் !!!

Friday, April 29, 2011

பஞ்சவர்ண புறா

பதிவுலக நண்பர்களுக்கு என் வணக்கம் ....

ஒரு கதை ..... அதை ஒரு தொடராக எழுதலாம் ன்னு எண்ணம்

என்ன சொல்லுறீங்க....... கதையின் தலைப்பு " பஞ்சவர்ண புறா"

பிழை இருந்தால் மன்னியுங்கள் (திருத்துங்கள்) ...

கதை சொல்லவா ? நண்பர்களே ????!!!!!!!

தீராதடி இந்த காதல் ...

தீராதடி இந்த காதல் ...

என் நினைவுகளின்
சொந்தக்காரியே !
தீராதடி இந்த
காதல் !

இறைவன் என்
வானில் வரைந்த
ஓவியமே !
இன்று வெறும்
காகிதமாக என்
வானம் !

இரு விழி பார்வை
இமை கோபம்
செல்ல சண்டை
செவ்விதல் முத்தம்
இப்படி ஆயிரம்
இம்சைகள் இன்னும்
வேணுமடி எனக்கு !

நேற்று கூட
உன்பெயரில் யாரையோ
அழைத்த - குழந்தையிடம்
என் பார்வை
புன்னகையுடன் !!!

விழியில் விழுந்ததால்
காதலிக்கவில்லை ! - என்
மனதில் பதிந்ததால்
காதலித்தேன் !!
தீராதடி இந்த காதல்.......

Tuesday, April 26, 2011

அக்கா! - தங்கை!!

எங்கள் தேவனே
யாரிடம் முறையிட ?..

அப்பாவை அழைத்தாய் !
அம்மாவையும் அழைத்தாய் !!
எங்களை ஏன்
தவிக்கவிட்டாய்
இவ்வுலகில் !!!

எனக்கு - அவள் !
அவளுக்கு - நான் !
இந்த உறவு போதுமென்று
புறம் தள்ளினாயோ ?

உறவுகள் துறக்கின்றன
மணம்முடிக்க செலவாகுமே ?
யார் கேட்டார்
அன்பை தவிர ?

பெண் பார்க்க வந்தவன்
இடம் பார்கிறான் !
மணம் முடிக்க நினைப்பவன்
பணம் பார்கிறான் !!

மனசு மாவிழை
தோரணம் போல்
வாசலோடு சரியா?

இறைவா ?
உதிரும் கண்ணீரும்
உதிரமாக !
வளமும் வாழ்வும்
தூரமாக !!
எங்களுக்கு மட்டும்
ஏன் ?

Tuesday, April 19, 2011

கடை(சி ) பார்வை வேண்டுமடி!....

அன்பு தங்கமே !,

காலனின் அழைப்பை
எதிர் நோக்கி ,
என் இறுதி
உறக்கத்தை தேடும்
என் விழிகளுக்குள்
உன் நினைவே !!

உன்னை தேடும்
இந்த உயிருக்கு
இனி அவள்
தடை இல்லை !
மனைவியின் மடியில்
மன்னிப்பாய்
என் கண்ணீர் !!

ஆறடியில் அடங்குவேனோ
அக்கினியில் சிதைவேனோ
நான் அறியேன் ?
உன் திருபாதம்
நாடி என்
இறுதி கடிதம் !!!

நாம் பிரிந்து
நாலு பத்து
வருசங்களாச்சு !

வாலிப காதலை
விட - இந்த
வயோதிக காதல்
வலிக்குதடி !

நீ
தனியாளோ ? - இல்லை
துணையோடோ ?
கேட்க வரம்பில்லை,
ஆனால் மனமில்லை
பாராமல் பிரிய
இறுதியாக ?!!!

உன்
கடை(சி ) பார்வை
வேண்டுமடி!
காட்டுக்கு செல்லும்
முன்!!!

Monday, April 18, 2011

ரகசிய சினேகிதி !!!!!

எங்கு சென்றாயடி
என் உயிரே?
வாரம் கழிந்ததடி
வருடத்தின் வேதனையுடன்!

எட்டடி தொலைவில்
நீ !
ஏனோ உன்னருகில்
நினைவு !!

நீ பார்க்கும்
திசையெல்லாம் ...
என் பார்வையும்
அனிச்சையாக !!!

நீ சென்ற
பின்னும் !
நீ அமர்ந்த
இடம் நோக்கி
நான்- ஒற்றையாக !!!