Friday, March 4, 2011

முதல் ராத்திரி!!!

கனவொன்று கண்டேனடி !
உனக்கும் எனக்கும்
முதராத்திரி!!

கவிதை வரும்
மாலை பொழுதில் ....

அந்தி பகலவன்
ஓடி மறைந்தான் !
காதல் நிலா
வெட்கப்படுவாள் என்றோ ?!!

இல்லை என்னுடன்
காதல் பேச நீ
வருவாய் என்றோ ?!!!

நாளை வருவான்
கேட்டு வைக்கிறேன் !

ஒற்றை நிலா
உச்சிவரை சென்றுவிட்டாள்!
வானை நோக்கிய
என் விழிகள் !!!

யாரோ அழைக்கிறார்கள்
இடை மறித்து சொன்னது
என் மனது !

திரும்பிய விநாடி
திகைத்து போனேன்
வந்தது நீ தான் !!!

என் விழியோடு
புது மொழி பேசியது
உன் விழிகள் !!!

காதலை கூட
சொன்னாய் - சில
கவிதை கூட
பேசினாய் - ஒரு
பொய் கோபம் கூட
கொண்டாய் ..

எதிரியாய் நேரம்
கரைகிறதே !
ஏனோ - நான்
பேச வார்த்தை தெரியாத
குழந்தையாய் நின்றேன் !!!

எப்படி பேசுவேன்
நேற்று மணமேடையில் நீ !
மணமகன் யாரோ ?!!
கனவை கலைத்தது
கண்ணீர் !!!

கனவொன்று கண்டேனடி !
உனக்கும் எனக்கும்
முதராத்திரி!!!!??

No comments:

Post a Comment