Tuesday, April 26, 2011

அக்கா! - தங்கை!!

எங்கள் தேவனே
யாரிடம் முறையிட ?..

அப்பாவை அழைத்தாய் !
அம்மாவையும் அழைத்தாய் !!
எங்களை ஏன்
தவிக்கவிட்டாய்
இவ்வுலகில் !!!

எனக்கு - அவள் !
அவளுக்கு - நான் !
இந்த உறவு போதுமென்று
புறம் தள்ளினாயோ ?

உறவுகள் துறக்கின்றன
மணம்முடிக்க செலவாகுமே ?
யார் கேட்டார்
அன்பை தவிர ?

பெண் பார்க்க வந்தவன்
இடம் பார்கிறான் !
மணம் முடிக்க நினைப்பவன்
பணம் பார்கிறான் !!

மனசு மாவிழை
தோரணம் போல்
வாசலோடு சரியா?

இறைவா ?
உதிரும் கண்ணீரும்
உதிரமாக !
வளமும் வாழ்வும்
தூரமாக !!
எங்களுக்கு மட்டும்
ஏன் ?

2 comments:

  1. Dei anna!! kalakkura..Keep rocking...

    ReplyDelete
  2. keerthi said...
    Dei anna!! kalakkura..Keep rocking...

    வாங்க keerthi

    ரொம்ப நன்றிங்கோ ...........

    ReplyDelete