Tuesday, May 17, 2011

காதலி வரும் நேரம் !!!

உன்னை தேடியே
என் பார்வை
தீர்ந்துவிடும் போல
சீக்கிரம் வந்துவிடேன் !!

நீ அருகில்
இருக்கையில் மட்டும்!
இவ்வுலகம் விடிந்து
இருப்பதேன் ?

நீ வந்து சென்ற
இடமெங்கும்
மல்லிகை மணம்!
நீ சூடி
இருந்தது என்னவோ
கனகாம்பரம் ?

இரவெல்லாம் உறங்கியது
போல் நினைவு !
அறையெல்லாம் உன்
பேச்சு சத்தம் !
கனவோ ?

என்னவோ இருக்கட்டும்
என்னவள் வருவாள்
நேரமாச்சு !!
பேருந்தை நோக்கும்
விழிகள் மட்டும்
ஊமையாக ?

6 comments:

  1. //இரவெல்லாம் உறங்கியது
    போல் நினைவு !
    அறையெல்லாம் உன்
    பேச்சு சத்தம் !
    கனவோ ?// supper

    ReplyDelete
  2. //போளூர் தயாநிதி said...

    //இரவெல்லாம் உறங்கியது
    போல் நினைவு !
    அறையெல்லாம் உன்
    பேச்சு சத்தம் !
    கனவோ ?// supper//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி போளூர் தயாநிதி

    ReplyDelete
  3. காதல் செய்து கவிஞர் ஆக மாறினீர்களா (அல்லது) கவிஞர் ஆக இருப்பதால் காதல் செய்ய முயற்சியா?

    ReplyDelete
  4. //////நீ வந்து சென்ற
    இடமெங்கும்
    மல்லிகை மணம்!
    நீ சூடி
    இருந்தது என்னவோ
    கனகாம்பரம் ?
    ///////////

    இந்த ரசனைதான் காதலுக்கும் காதலிக்கும் அவசியம் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. //bals said...

    காதல் செய்து கவிஞர் ஆக மாறினீர்களா (அல்லது) கவிஞர் ஆக இருப்பதால் காதல் செய்ய முயற்சியா?//

    காதல் செய்ய முயற்சி இல்லை bala கவிதையையே காதலிப்போமே ...
    வருகைக்கு நன்றி பாலா

    ReplyDelete
  6. ////! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
    ////நீ வந்து சென்ற
    இடமெங்கும்
    மல்லிகை மணம்!
    நீ சூடி
    இருந்தது என்னவோ
    கனகாம்பரம் ?
    ///////////

    இந்த ரசனைதான் காதலுக்கும் காதலிக்கும் அவசியம் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி //

    கண்டிப்பாக அவசியம் சங்கர்
    வருகைக்கும் ரசித்து படித்தமைக்கு நன்றி பனித்துளி சங்கர்

    ReplyDelete