அவன் : அன்று தெரியாது
உன்னை காதலிப்பேன்
என்று...
இன்றும் தெரியாது
என்று சந்தித்தோம்
என்று ....
ஜென்மம் தொட்ட
உறவு நீ !!!
அவள் : என் முகம்....?
அவன் : ஆறடியோ......
ஈரடியோ.........
என் அருகில்
என்றும் பௌர்ணமி !!!
அவள் : பொய் ....?
அவன் : எனக்கு மட்டுமே
சொந்தமான உன்
கோபம் ....!
அவள் : முத்தம் ....?
அவன் : அ ... முதல்
ஔ... வரை
நமக்குள் மட்டும் ....
அவள் : பிரிவு ...?
அவன் : வார்த்தையிலேயே வலி
உள்ளது ...
வார்த்தையாக மட்டும்
இருக்கட்டுமே ....
நம் வாழ்வில்
வேண்டாமடி!!! .....
அவள் : காமம் ....?
அவன் : என் அன்பின்
அடுத்த பரிமாணம் !!!
அவள் : காதல் .....?
அவன் : இன்று வரை
உன் உதடுகள்
பேசாத வார்த்தை ...
என்றும்
உன் இமைகளிலும்
இரு விழிகளிலும்
காண்பது ...!!!
கவிதை [நல்ல உரையாடல்] அருமை..
ReplyDelete//அன்புடன் மலிக்கா said...
ReplyDeleteகவிதை [நல்ல உரையாடல்] அருமை..//
நன்றி மல்லிகா
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி