Friday, March 18, 2011

சும்மா ஒரு கவிதை!!!.........சும்மா ஒரு காதல்!!!........

அவள் : முதல் சந்திப்பு .....?

அவன் : அன்று தெரியாது
உன்னை காதலிப்பேன்
என்று...

இன்றும் தெரியாது
என்று சந்தித்தோம்
என்று ....

ஜென்மம் தொட்ட
உறவு நீ !!!

அவள் : என் முகம்....?

அவன் : ஆறடியோ......
ஈரடியோ.........
என் அருகில்
என்றும் பௌர்ணமி !!!

அவள் : பொய் ....?

அவன் : எனக்கு மட்டுமே
சொந்தமான உன்
கோபம் ....!

அவள் : முத்தம் ....?

அவன் : அ ... முதல்
ஔ... வரை

நமக்குள் மட்டும் ....

அவள் : பிரிவு ...?

அவன் : வார்த்தையிலேயே வலி
உள்ளது ...
வார்த்தையாக மட்டும்
இருக்கட்டுமே ....
நம் வாழ்வில்
வேண்டாமடி!!! .....

அவள் : காமம் ....?

அவன் : என் அன்பின்
அடுத்த பரிமாணம் !!!

அவள் : காதல் .....?

அவன் : இன்று வரை
உன் உதடுகள்
பேசாத வார்த்தை ...

என்றும்
உன் இமைகளிலும்
இரு விழிகளிலும்
காண்பது ...!!!

2 comments:

  1. கவிதை [நல்ல உரையாடல்] அருமை..

    ReplyDelete
  2. //அன்புடன் மலிக்கா said...
    கவிதை [நல்ல உரையாடல்] அருமை..//

    நன்றி மல்லிகா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி

    ReplyDelete