Wednesday, January 5, 2011

விதியோடு போராடும் மௌனங்கள்!!!

நான்கு கண்களும்
நலம் விசாரிக்கையில்
ஏதோ என்றது
நம் கண்ணீர் !!!

பட்டாம் பூச்சியாய்
கோர்த்து திரிந்த
உன் கைகளில் !
இன்று உன்னைப்போல்
இன்னொரு குழந்தை !!!

எத்தனை மன்னிப்புகள்
எத்தனை வாழ்த்துக்கள்
எத்தனை விசாரிப்புகள்
அத்தனையும் ஒரு நிமிட
விவாதத்துடன் !!!

மனம்விட்டு உதிர்ந்த
சிரிப்புகள் - இறுதியில்
கனத்ததடி மனது
எதிர்பார்ப்புகளற்ற
என் தோழி
மீண்டும்
" என்று சந்திப்போம்? " - என்கையில்
தீராத உன் நினைவுகளுடன்

6 comments:

  1. நன்றி அன்பு சகோதரரே

    ReplyDelete
  2. @ தோழி பிரஷா

    நன்றி நன்றி

    ReplyDelete
  3. எத்தனை மன்னிப்புகள்
    எத்தனை வாழ்த்துக்கள்
    எத்தனை விசாரிப்புகள்
    அத்தனையும் ஒரு நிமிட
    விவாதத்துடன் !!!

    மனம்விட்டு உதிர்ந்த
    சிரிப்புகள் - இறுதியில்
    கனத்ததடி மனது
    எதிர்பார்ப்புகளற்ற
    என் தோழி
    மீண்டும்
    " என்று சந்திப்போம்? " - என்கையில்
    தீராத உன் நினைவுகளுடன்


    super

    ReplyDelete