Friday, January 7, 2011

குழந்தையின் கிறுக்கல்கள் !!!

முட்டாளாக முட்டாமல்
சுகமாகவே வந்தேன்
அன்னையே உன்
மூச்சிரைப்பிலும் முக்களிலும்
தண்ணீர்குடம் தாண்டி
தாய்மடி தாண்டி
வந்தேன் உன்னைக்காண !!!!

எத்தனையோ கஷ்டங்கள்
எவ்வளவு வலிகள் தான்
என்னால் உனக்கு

மன்னிப்பு கேட்க
மொழி தெரியாது
என் மொழியில்
கேட்டேன் - என்
முதல் அழுகை

எனக்கான ஒரே
வானம் ..
எனக்கான ஒரே
உலகம் ..
உன் வயிறு!!
இன்னொரு முறை
உன் அன்பில்
உள் இருக்க ஆசை தான்
போதும் இந்த ஜென்மம்
அடுத்த ஜென்மத்திலும்
அனுமதி கொடு !!!

No comments:

Post a Comment