Thursday, January 6, 2011

போய்வாரேன் தாய் வீடே .....

கல்யாணமும் ஆய்டுச்சு
கணவனோட போகபோறேன் !
பெற்ற கண்கள் வலி அனுப்ப
புது வீடு போகபோறேன் !

நேற்று கண்ட கனவெல்லாம்
நிஜமாகும் நேரம் வர !
புது கனவு காண
புகுந்த வீடு போகபோறேன் !!

இருந்தாலும் ஒரு
ஏக்கம் !?

எப்படி நான்
இருக்கபோறேன் ?!!

மஞ்சபூசி அழகு
பார்த்த ...
என் அம்மாவை தனியா விட்டு?!

" பொழுது சாயும்
நேரமாச்சு ...
புள்ள எங்கடி
இன்னும் காணோம் ?.....

சத்த தூரம்
போய் பாரு
புள்ள கிள்ள
வர்றாளானு...... "

ஆளுமையோடு அன்பை காட்டும்
அப்பாவை விட்டு ...!!?

நேத்து வரை
சண்டைகோழி ...
இன்று ஏனோ
தெரியலடா ....?

" சாஞ்சி அழனும்
தோளைக்கோடு .... "
தோழனான அண்ணனை விட்டு ....?!!

எப்போதும் போகாது
செத்தாலும் உன் நினைவு .....
போய்வரேன் என் வீடே ...............!!!

2 comments: