காலம் பதில் சொல்லும்
என்றாய் ?
இன்றும் உன்
நினைவுச்சிறைக்குள்
நிமிடங்களை தொலைக்கும்
கைதி நான் ...!
என் ரணமான
இரவுகள் !
என் காதலின்
அருஞ்சொற்பொருள் ...!
இன்றும் நான்
ரசிக்கும் சில
பாடல் வரிகளுக்குள்
நீ ....!
என் கனவுகளும்
பொய் சொல்லவில்லை !
எப்படி சொல்வாய்
பிரிந்துவிடலாம்
என்று...?!
எனக்கு
காலம் சொன்ன
பதிலும் நீதானடி.....!
பிரிவின் வலிகளை சொல்லும் வரிகள் நல்லாயிருக்கு...
ReplyDeleteஅனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் , வாசிப்புகளுக்கும்
ReplyDeleteநன்றி வெறும்பய