Sunday, August 22, 2010

உயிர் வலி

நான்

மரித்துப்போனேனோ - இல்லை
மக்கிப்போனேனோ !
உயிர் பிழைக்க
உடன் வர
மாட்டாயா?

எத்தனை அழுத்தங்கள்
எனக்குத்தான்!
சுமை தாங்கிகுள்ளும்
சொர்க்கம் இருப்பது
உனக்கு கூடவா
தெரியவில்லை ?

எனக்காக இந்த
உலகே உன்னை
தூற்றினாலும் !
இன்னும் என்
பொறுமை இழக்கவில்லை !

ஏமாற்றத்திலும் எதிர்பார்க்கிறேன்
எப்படியாவது என்னை
எழுப்புவாய் !!! - என்றது
பருவ மழையை
பார்த்து வாழும்
விவசாயி விதைத்த
விதை - மண்ணுக்குள்..................

4 comments:

  1. நல்லா இருக்குங்க வார்த்தை கோர்வை

    ReplyDelete
  2. @அப்பாவி தங்கமணி

    ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  3. உயிர் வலி கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. @ Priya

    வருகைக்கு நன்றி

    ReplyDelete