Sunday, April 11, 2010

ஒரு நாள் இரவில் நான் கண்ட கனவில் அவள் ....

ஒரு நாள் இரவில்
நான் கண்ட கனவில் அவள் ....

அதி காலையிலே
அந்த கதிரவன் கண் விழிக்கையிலே
ஒரு நிலவொளி வீசுதங்கே !..

அந்த வேளையிலே
பூவிதழ் மீதினிலே
பனி துளி வெடிகையிலே
பூக்கள் எல்லாம் பயந்ததங்கே!...

அந்த -
வஞ்சி கொடி இடையாள்
பிஞ்சு மனதுடையாள்
இருபது வயதுடையாள்
என் மனதை கிள்ளிசென்றாள்

அவள் -
நிலவில் செதுக்கிய சிலையோ - இல்லை
என் நினைவை கெடுத்த கிளியோ !!

கண்ணால் ஒரு வலை விரித்தாள்
கன்னி அவள் ஒரு கள்ளி !
காதல் வலையில் தவிக்க விட்டு
களவாடி சென்றால் என் இதயத்தை !!

இறுதிவரை -
அவளும் சொல்ல வில்லை
நானும் சொல்லவில்லை !!

என் உயிர் உள்ளதென்றால்
ஏமாற்றம் எனக்கில்லை!!
ஏமாற்றம் உள்ளதென்றால்
என் உயிர் எனக்கில்லை !!!

இரவு தொடர்கிறது ..........

4 comments:

  1. //என் உயிர் உள்ளதென்றால்
    ஏமாற்றம் எனக்கில்லை!!
    ஏமாற்றம் உள்ளதென்றால்
    என் உயிர் எனக்கில்லை !!!//

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி மதுரை சரவணன்

    ஆனால் இது கவிதை மட்டுமே !!!!

    ReplyDelete
  3. //இரவு தொடர்கிறது .......... //.........தொடரும் இரவுகளில் காதல் வாழ்வதால் கனவுகளும் தொடரும்தானே!!!

    ReplyDelete
  4. @ Priya

    வருகைக்கு நன்றி

    கண்டிப்பா கனவுகள் தொடரும்

    ReplyDelete