Friday, April 29, 2011

தீராதடி இந்த காதல் ...

தீராதடி இந்த காதல் ...

என் நினைவுகளின்
சொந்தக்காரியே !
தீராதடி இந்த
காதல் !

இறைவன் என்
வானில் வரைந்த
ஓவியமே !
இன்று வெறும்
காகிதமாக என்
வானம் !

இரு விழி பார்வை
இமை கோபம்
செல்ல சண்டை
செவ்விதல் முத்தம்
இப்படி ஆயிரம்
இம்சைகள் இன்னும்
வேணுமடி எனக்கு !

நேற்று கூட
உன்பெயரில் யாரையோ
அழைத்த - குழந்தையிடம்
என் பார்வை
புன்னகையுடன் !!!

விழியில் விழுந்ததால்
காதலிக்கவில்லை ! - என்
மனதில் பதிந்ததால்
காதலித்தேன் !!
தீராதடி இந்த காதல்.......

No comments:

Post a Comment