Friday, May 20, 2011

இந்த(அந்த) நொடி போதுமடி!!! ......

எனைப்பார்த்து திரும்பும்
நேரமெல்லாம் ...
உன் கழுத்தோர
மடிப்பில்...
கரைந்தேனே நான் !

காலம் தள்ளி
காதலை சொல்ல..
வெட்கத்தை மட்டும்
விடையாய் கொடுத்து
ஓடினாயே ?
மாண்டாலும் மறக்காதடி
அந்த நொடி !!

இட்டேறி வழி
பயணத்தில் ...
இடறி நீ
என்மேல விழ ...
வெட்கம் இல்லா
முத்தமிட்டு ...
சுற்றும் முற்றும்
பார்த்த விழி
சொல்லிச்சடி
உன் காதல்!!!

இந்த ஜென்மம்
போதுமடி !
இந்த நொடி
நீளுதடி - என்
வாழ்வில் !!!!

Wednesday, May 18, 2011

காதலிப்போமா காலை வரை !!!!

இரவு வானம்
தனிமையில்!
என்னோடு நீ
மட்டும்!
நிழல் கூட
துணைக்கு வேண்டாம்!
காதலிப்போமா
காலை வரை !!

என் மார்மீது ..
நீ உறங்கி..
நான் உறங்கா..
நீண்ட இரவு ...
கேட்போம்!!!

நட்சத்திர சங்குகள்
பொருக்கி !
நீலவான கரையோரம்
மேக வீடு
கட்டலாம் !!!!

நிலா பெண்ணை
சாட்சிக்கு வைப்போம்
நம் காதலுக்கு !
காதலிப்போமா
காலை வரை !!!!

Tuesday, May 17, 2011

காதலி வரும் நேரம் !!!

உன்னை தேடியே
என் பார்வை
தீர்ந்துவிடும் போல
சீக்கிரம் வந்துவிடேன் !!

நீ அருகில்
இருக்கையில் மட்டும்!
இவ்வுலகம் விடிந்து
இருப்பதேன் ?

நீ வந்து சென்ற
இடமெங்கும்
மல்லிகை மணம்!
நீ சூடி
இருந்தது என்னவோ
கனகாம்பரம் ?

இரவெல்லாம் உறங்கியது
போல் நினைவு !
அறையெல்லாம் உன்
பேச்சு சத்தம் !
கனவோ ?

என்னவோ இருக்கட்டும்
என்னவள் வருவாள்
நேரமாச்சு !!
பேருந்தை நோக்கும்
விழிகள் மட்டும்
ஊமையாக ?

Monday, May 16, 2011

என் வானம் !

அம்மாவாசை இரவாய்
என் வானம் ! - அதில்
முழு நிலவாய்
உன் முகம்
மட்டும் தெரிவது
எப்படி ?

காதல் ரொம்ப தூரமோ ? ....

காற்றில் போட்ட
துளையாக..
காணாமல் போனதே
என் காதல் !...

கருகி விழுந்த
பூவாக ...
மக்கி போனதே
என் காதல் !!....

காதலில் நான்
ஒரு நொண்டி !
எப்படி தொடுவேன்
இமயத்தை !!?

அவளுக்கு பிடிக்கும் .....

என் கவிதை
பிடிக்கும் அவளுக்கு .....

அதில் காதல்
பிடிக்கும் அவளுக்கு .....

என்னை கூட
பிடிக்கும் அவளுக்கு .....

என் காதல்
மட்டும் பிடிக்காது !!!!!

Saturday, May 14, 2011

என் தோழியே மன்னிப்பாயா ? !!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

உன் கோபத்தை
ரசிக்க தெரிந்தவன்
மதிக்க மறந்து
விட்டேன் -மன்னிப்பாயா?

உன் பிரிவால்
அறிந்தேனடி ,
அன்பின் விலையை !!!

பாராத உன்
முகம் !
பதில் இல்லாத
பேச்சு !
தனிமையிலும் கேட்குதடி
உன் சிரிப்பு
சத்தம் !!!

எவரையும் நினைப்பதில்லை
என்னை மட்டும் வெறுத்துக்கொண்டு
என் தோழி - மன்னிப்பாயா ?

Thursday, May 5, 2011

சும்மா... கவிதைகள் : வெட்கமா ? - வேண்டாமா ?

நான் உன்னை
கடக்கும் பொழுதெல்லாம்
சாத்திக்கொள்கிறதே - உன்
ஜன்னல் கதவுகள் !!?

நான் உன்னை
பார்க்கும் பொழுதெல்லாம்
சிரிக்கிறாயே !!?
என் பார்வை என்ன
நைட்ரஸ் ஆக்சைடா ?!!

ன்னை கடக்கும்
பொழுது மட்டும்
புதிதாய்,
நடை பழகுதே
உன் கால்கள்
அன்னிச்சையாக ?!!

Tuesday, May 3, 2011

சின்ன சின்ன கவிதைகள் சொல்லி ...

காதலை தான்
தர மறுக்கிறாய்!
கனவையாவது கொடு
நான் இருக்கிறேனா
பார்க்கிறேன் ?!!

காதலை தவிர்த்து
எத்தனையோ பொய்
சொல்லி இருப்பேன்
உன்னிடம் பேச !
தவிர்த்த ஒரே ஒரு
உண்மையை சொல்ல
பயம் !!
பேச மாட்டாயோ
என்று !!?

ன் நினைவுகளின்
நிமிடங்களை கேட்டுப்பார் ,
ஒவ்வொரு வினாடிகளுமே
உன் பெயரையே
சொல்லும் !!!